tamilnadu

img

முஸ்லிம் சிறுவனை தீவைத்து எரித்த கொடூரம்...

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில், 15 வயது முஸ்லிம் சிறுவனை ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுமாறு கூறி, தீவைத்து எரித்த கொடூரம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மாவட் டத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிம் சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு மிரட்டியுள்ளது. 
ஆனால், சிறுவன் அவ்வாறு சொல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 பேரும், சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு, ஹாதீஜா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்குவைத்து சிறுவனைத் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.தற்போது அந்தச் சிறுவன் 60 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாததாலேயே 4 பேர் கும்பல், தன்னை தீயிட்டு எரித்துக் கொலை செய்ய முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.ஆனால், பாதிக்கப்பட்ட சிறுவன் முரண்பட்ட வகையில் பேசுவதாகவும், உண்மையில் அவனுக்கு யாரும் தீவைக்கவில்லை; மாறாக, அவனே தீயிட்டுக் கொண்டான்; ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்திற்கும் தீவைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

;